on date The only temple in Trichy having rudtrasha pandal for Sivan Sannathi with high sandam and santoram
Saturday, November 9, 2013
Tuesday, November 5, 2013
Thursday, September 26, 2013
Monday, June 24, 2013
இறைவா! ஏன் இந்த
சோதனை?........................
உத்தரக்காண்ட் மற்றும் ஹிமாசல் பிரதேச
மாநிலங்களில் காலத்திற்கு முன்னாலேயே பெய்த பெருமழையால் ஹிமாலய சுனாமி நதிகளில் வெள்ளப் பெருக்கு, சாலைகள், பாலங்கள் வீடுகள்
கிராமங்கள் கூட அனைத்தும் சேதமடைந்து விட்டன.
பல இடங்களில் 60000 திற்கும் மேற்பட்ட யாத்திரிகள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு உணவு தண்ணீர் மருந்து எதுவும் இல்லை.
எத்தனை உயிர்கள் போயின என்று யாருக்கும் தெரியவில்லை ஆற்றில்
அடித்து செல்லப்பட்டிருக்கிறார்கள் நிலச் சரிவின் காரணத்தில் ஏற்பட்ட சேற்றில் எத்தனை
பேர் புதைபட்டிருக்கின்றனரோ தெரியவில்லை.
அநேகர் இதிலே இறைவனை தரிசனம் செய்ய
புறப்பட்டு சென்றவர்கள் என்பதுதான் கொடுமை.
மாநில மத்திய அரசுகளால் ஒன்றும் செய்ய
முடியவில்லை மலைப் பிரதேசம் சாலைகள் அனைத்தும் பழுதடைந்து விட்டன மழையும் பெய்து
கொண்டிருக்கின்றது.
தொலைக்காட்சியில் பார்த்த காட்சிகள் மனத்தை உருக்குகின்றன
ஆற்றின் கரையோரம் கட்டிய அடுக்கி மாடி வீடுகள் எல்லாம் எதோ மண் வீடு போல வெள்ளத்தினால்
அப்படியே சரிந்து விழுகின்றன வண்டிகள் எல்லாம் தண்ணீரின் பிரவாகத்தில் அடித்து
செல்லப்படுகின்றன.
கேதார்னாத் கோவிலை சுற்றி ஒன்றுமே
இல்லை அனைத்தும் அடித்துச் செல்லபட்டுவிட்டன. சுற்றிலும் எல்லாம் அழிந்து விட
கேதார்நாத் கோவில் மட்டும் எஞ்சியுள்ளது. தரிசனம் தொடங்க வருடங்கள் ஆகுமாம் சீக்கியர்களின்
புனிதத் தலமான ஹேம்குண்ட் சாஹிப் முழுவதும் ஒரே கல் ஹெலிகாப்டர்
இறங்கக் கூட ஒரு இடம் இல்லை. ஏன் இவ்வளவு சேதம்
மழையினால் மட்டுமா?மனிதனின் பேராசையாலும்தான், சாலைகளை விரிவு படுத்துகிறோம் என்று சொல்லி
வெடி வைத்து மலைகளை தகர்க்கிறோம்.
யாத்திரிகள் அதிகம் வருகின்றார்கள்
என்று கிடைக்கும் இடத்தில் எல்லாம்
ஆற்றுப் படுகைகள் எல்லாம் அடுக்கு மாடி வீடுகள் ஹோட்டல்களை
கட்டிக்கொண்டிருக்கிறோம். யாத்திரை சமயத்தில் போக்குவரத்தும் மிகவும் அதிகமாகி
விட்டது.
மின்சாரத்திற்காக ஒரு கி.மீக்கு ஒரு
புனல் மின் நிலையம் அமைத்து ஆற்றின் போக்கை முற்றிலுமாக மாற்றி விட்டோம்.
தேஹ்ரி அணையினாலும் சேத மேற்பட வாய்ப்புகள் உள்ளன.
மக்கள் தொகை அதிகமாக மரங்களை வெட்டி
விளை நிலங்களாக மாற்றி மலையின் பிடிப்புத் தன்மையை மாற்றி வருகிறோம்.
1982 வருடம் நாங்கள் 80 பேர் இவ்வாறுதான்
ஒரு பெயர் தெரியாத குக்கிராமத்தில் 10 நாட்கள் மாட்டிக்கொண்டோம், ஆகவே பெயர் தெரியாத
அத்துவானக் காட்டில் மாட்ட்க்கொள்வது எவ்வளவு கொடுமையானது என்று தெரியும்.அது ஒரு
பங்கு என்றால் இதுவோ நூறு மடங்கு.
ஆயினும் " இறைவா! உன் பக்தர்களை
காக்க ஏன் தவறிவிட்டீர்" என்று கதறுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்.
இப்படித்தான் நடக்கும் என்று முன்னரே கூறியும்
உள்ளனர் ஒரு நாளில் பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள இரு மலைகள் கீழே விழுந்து
பத்ரிநாத் செல்லும் பாதை முற்றிலுமாக அடைபட்டுவிடும் என்று புராணங்களிலேயே உள்ளது.
இறந்த ஆத்மாக்கள் அந்த இறைவனடி சேர
26-6-2013 மாலை 6.00 மணிக்கு மோட்ச தீபம் ஏற்றுவோம். தங்கள்
உறவினர்களை இழந்தவர்கள் அனைவருக்கும் அந்த இறைவன் அதைத் தாங்கும் சக்தியை
அளிக்கட்டும்.
இனி மேலும் இது போன்று ஒரு சம்பவம்
நடக்காதிருக்க வேண்டுவோம் என்று அவனிடம் மன்றாடுவோம்.
கண்ணீருடன் அன்பன்
k.swaminathan 9894116746
www.ponmalaisamy.blogspot.com
Tuesday, June 11, 2013
Subscribe to:
Posts (Atom)